நாடு முழுவதும் தற்போது வெயில் கொளுத்தி எடுத்து வருகிறது. இந்த வெயிலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இந்நிலையில் குஜராத்தில் உள்ள வதோதரா போக்குவரத்து போலீசார் சூரிய வெப்பத்தை சமாளிக்க புதுமையான திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களின் போக்குவரத்து காவலர்களுக்கு குளிரூட்டிகளுடன் கூடிய ஹெல்மெட் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஏசி ஹெல்மெட்கள் 40-42 டிகிரி வெப்பநிலையின் போது குளிர்ச்சியை அளிக்கும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவை முழு சார்ஜிங்கில் இயங்கும். ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால், கிட்டத்தட்ட 8 மணி நேரம் குளிர்ச்சியை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.