கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்லூரி ஒன்றில் நடந்த கொலை சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலை மறுத்ததற்காக இளம்பெண்ணை கொடூரமாக கொன்ற‌ சீனியர் இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் ஹூப்ளியில் நடந்துள்ளது. நேஹா (24) என்ற பெண் பிவிபி கல்லூரியில் படித்து வருகிறார்.

சீனியரான மாணவர் ஒருவர் சில காலமாக காதல் என்ற பெயரில் அவரை பின்தொடர்ந்துள்ளார். நேஹா அவரது காதலை மறுத்ததால், அவரை பலி வாங்கும் நோக்கத்துடன் அவரது கழுத்தில் 9 முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.