விஜய் டிவியில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான நீயா நானா நிகழ்ச்சியை ஆரம்பத்தில் இருந்து கோபிநாத் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் வாரம் தோறும் ஏதாவது ஒரு தலைப்பு விவாதிக்கப்படும். அதன்படி இந்த வாரம் ஒளிபரப்பாகும் நீயா நானாவின் ப்ரோமோ காட்சி வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது இந்த வாரம் தமிழ்நாட்டின் food City என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்று உள்ளது. இதில் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்தையும் சேர்ந்த பலரும் கலந்து கொண்ட நிலையில் தங்களுடைய மாவட்டத்தில் இருக்கும் பிரபலமான உணவுகள் பற்றி பேசினர். அதில் ஒருவர் காஞ்சிபுரம் குடலை இட்லி என்று மூங்கிலில் செய்யும் இட்லியை குறித்து பேசி உள்ளார்.

இந்த இட்லி இரண்டே கால் கிலோ இருக்குமாம். அதனைப் போலவே மற்றொருவர் சிவகாசியில் பிரபலமான சிக்கன் முட்டை குல்பியை பற்றி பேசினார். ஆனால் தஞ்சாவூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் கோபிநாத்தை நிகழ்ச்சியிலிருந்தே தங்களுக்கு ஊருக்கு அழைத்துள்ளனர். இதில் வீணாக இருக்கும் இளநீரைக் குறித்து கூறி கோபிநாத்தை அசிங்கப்படுத்தியுள்ளனர். மற்றொரு பெண் ஒருவர் தஞ்சாவூர் கோவிலுக்கு போவீங்களா என உண்மையான ட்ரிப் போன்று கேள்வியை கேட்டுள்ளது மொத்த அரங்கத்தையும் சிரிக்க வைத்தது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.