விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் அண்மையில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நடிகை விசித்ரா ஒரு விஷயத்தை கூறியிருந்தார். அதாவது முன்னணி நடிகர் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதாகவும் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் தன்னை பலர் முன்னிலையில் அடைந்ததாகவும் அவர் கூறிய விஷயம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்த நிலையில் விசித்திரா கூறிய விஷயத்தின் படி பார்த்தால் அவர் குறிப்பிட்ட நடிகர் பாலகிருஷ்ணா எனவும் விசித்ராவை அறைந்த ஸ்டண்ட் மாஸ்டர் விஜய் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடந்த காட்சியையும் சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பரப்பிய நிலையில் விசித்ரா சமீபத்தில் அளித்த பேட்டியில் சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதாவது நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த விஷயத்தை கூறியதற்கான காரணம் எல்லா மக்களுக்கும் இந்த விஷயம் போய் சேர மீண்டும் என்பதற்காக தான். அது மட்டுமல்லாமல் நான் யார் பெயரையும் குறிப்பிட்டு கூறவில்லை. ஆனால் அதனை ரசிகர்கள் தேடி எடுத்து விட்டனர். அவர்கள் அப்படி தேடி எடுப்பார்கள் என்று தான் நான் இந்த விஷயத்தை கூறினேன். அவர்கள் தேடி எடுத்த விஷயம் உண்மைதான். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத சம்பவமாக உள்ளது என விசித்ரா கூறியுள்ளார்.