ஈரோடு கிழக்கு தொகுதியில் எம்எல்ஏவான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இ வி கே எஸ் இளங்கோவன் என்று முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து அவரின் தந்தையும் மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவருமான இ வி கே எஸ் இளங்கோவன் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று சமீபத்தில் அவர் வீடு திரும்பினார். இந்நிலையில் இன்று எம்எல்ஏவாக பொறுப்பேற்ற முதல் முறையாக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அவர் பங்கேற்று உள்ளார்.