தமிழ்நாட்டின் அரசியல் அரங்கு நீண்ட நெடிய வரலாறு கொண்டது என்றும் சேர, சோழ, பாண்டியர் காலத்தில் இருந்து தமிழர்கள்தான் விளையாடிக் கொண்டிருக்கிறார்களே தவிர, வடக்கே இருந்து வந்து இங்கு யாரும் வென்ற வரலாறு கிடையாது என்றும், தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அப்படி ஒரு சிறப்பு உண்டு என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று சட்டசபையில் பேசியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள பாஜக து.தலைவர் நாராயணன் திருப்பதி, ‘வரலாற்றில், தெற்கு, வடக்கு பிரிவினை பேசிய யாரும் தெற்கில் இருந்து வடக்கிற்கு சென்று வீழ்ந்தது கிடையாது. ஊழல் செய்து சிறையில் அடைபட்டது கிடையாது. அவர்கள் வெட்கமின்றி ஆட்சிக்காக கூட்டணி அமைத்து வெற்றி பெற நினைத்தது கிடையாது’ என கூறியுள்ளார்.