தொடர்ந்து சர்ச்சையாக பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக இன்று திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆளுநர் மாளிகை முன் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தன. ஆளுநருக்கு எதிரான போராட்டங்களுக்கு இதுவரை மறைமுகமாக ஆதரவு அளித்து வந்த திமுக, இம்முறை நேரடியாக களத்தில் இறங்கியுள்ளதாகவும், போராட்டம் மட்டுமல்லாமல், விரைவில் குடியரசுத் தலைவரை சந்தித்து ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் தற்போது இந்த பிளான் முற்றிலும் மாற்றப்பட்டு ஆளுநர் மாளிகை பக்கமே செல்லாமல், சைதாப்பேட்டை தேரடித் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு பதில் தேரடித் திடலில் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.