பெரும்பாலும் நீண்ட தூர பயணத்திற்கு மக்கள் ரயில் பயணத்தையே தேர்வு செய்கின்றனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்வது வழக்கம். பயணிகளின் சவுகரியத்திற்கு ஏற்ப ரயில்வே துறையில் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.  மேலும் ஒவ்வொருமுக்கியமான  பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கோடை விடுமுறையில் மக்களின் வசதிக்காக 217 சிறப்பு ரயில்கள் உட்பட 4010 ரயில்களை இயக்க இந்திய ரயில்வே முடிவுசெய்துள்ளது.

இந்த சிறப்பு ரயில்கள் இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் என கூறப்பட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வேயில் 20 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. இதில் இருக்கைகளை முடக்கி வைத்தல், இடைத்தரகர் உள்ளிட்ட முறைகேடுகளை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.