காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவேரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பிப்ரவரி 27ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. ஈரோடு மாவட்டம் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்தும் அரசியல் கட்சியினர் குவிந்து வருகிறார்கள்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது. வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி 7ஆம் தேதி கடைசி நாள் ஆகும். பிப்ரவரி 8ஆம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறும். வேர்ப்பு மனுக்களை திரும்ப பெற பிப்ரவரி 10ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் காங்கிரஸ், தேமுதிக, நாதக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.