ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக கட்சி போட்டியிடும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் போட்டியிட வேண்டும் என்று என்னிடம் அதிமுக தலைமை விருப்பம் தெரிவித்தனர். இதுகுறித்து நான் கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய பிறகு கூட்டணியில் முதன்மை கட்சியான அதிமுகவை தற்போதுள்ள சூழ்நிலையில் போட்டியிடட்டும் என்று முடிவு செய்துவிட்டோம்.

ஜனவரி 19-ஆம் தேதி அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் என்னை சந்தித்து பேசிய நிலையில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக இடைத்தேர்தலில் போட்டியிடட்டும் என்று முடிவு செய்துள்ளது. அந்த தொகுதியில் கூட்டணியான அதிமுக வெற்றி பெறுவதற்கு வேண்டிய அனைத்து களப்பணிகளையும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின்  தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மேற்கொள்வார்கள் என்று கூறியுள்ளார். மேலும் இடைத்தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி அதிமுக போட்டியிடட்டும் என்று விட்டுக் கொடுத்தது எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த முதல் வெற்றி என்று கூறப்படுகிறது.