இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நடைபெற்று வந்த நிலையில் பிணை கைதிகளை விடுவிக்க நான்கு நாள் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை 10:30 மணியுடன் போர் நிறுத்தம் நிறைவடைய இருந்த நிலையில் கத்தார், எகிப்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தத்தை நீட்டிக்க பேச்சுவார்த்தை மேற்கொண்டன.

இந்நிலையில் மேலும் இரண்டு நாட்கள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு 10 பினைய கைதிகளுக்கும் ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும் என்று முன்னதாக இஸ்ரேல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.