தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான 29 வயது நபர் சதுரோங் சுக்சுக் என்பவருக்கும் 44 வயது காஞ்சனா பசுந்துக் என்பவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று இருந்தது. அப்போது மணமகன் சதுரோங் பார்ட்டியிலிருந்து விலகிச் சென்று விட்டு பின்னர் மது போதையில் துப்பாக்கியுடன் வந்துள்ளார்.

அப்போது அவர் தனது தாய், சகோதரி மற்றும் மணமகளை நோக்கி சுட்டு கொலை செய்தார். அப்போது தவறுதலாக இரண்டு குண்டுகள் விருந்தினர்கள் இருவர் மீது பட்டுள்ளது. அதில் ஒருவர் உயிரிழந்த விட மற்றொருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதன் பிறகு சதுரோங் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து போலீசார் விருந்தினர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது மணமகனுக்கும் மணப்பெண்ணுக்கும் இடையே இருந்த வயது வித்தியாசத்தால் இருவரும் மேடையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறியுள்ளனர்.