16 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களை சேர்க்கக் கூடாது என கோச்சிங் சென்டர்களுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் தகுதி விவரம், பயிற்சி மற்றும் கட்டணத்தை இணையதளத்தில் வெளியிட வேண்டும். 16 வயதுக்கு உட்பட்ட மாணாக்கர்களை சேர்க்கக் கூடாது.

மேலும், பெற்றோர்களை தவறாக வழிநடத்துவது, கூடுதல் கட்டணம் வசூலிப்பது உள்பட முறைகேடுகளில் ஈடுபட்டால், ரூ. 1 லட்சம் அபராதம் அல்லது கோச்சிங் சென்டர்களின் உரிமம் ரத்து செய்யப்படுமென எச்சரித்துள்ளது.