மகளிர் உரிமைத் திட்டத்தின்கீழ் விடுபட்டவர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தேர்தலுக்கு பிறகு அனைத்து தகுதியுள்ள மகளிருக்கும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என தேர்தல் பரப்புரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக அமைச்சர் உதயநிதி மீது அதிமுக சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.