இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு நாட்டில் உள்ள ஏழைப் பெண்களுக்கு மூன்று காஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும். வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்திற்கு தகுதி பெற்றவர்கள். இந்த திட்ட மூலம் பிபிஎல் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 1600 வட்டி இல்லா கடன், கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர் வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் கேஒய்சி சரிபார்ப்பு செய்தால் மட்டுமே சமையல் சிலிண்டர் தடை இன்றி கிடைக்கும் என்று பெட்ரோலிய நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுருத்தியுள்ளன. கேஒய்சி சரிபார்ப்பு செய்யாத வாடிக்கையாளர்களின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இந்த கேஒய்சி சரிபார்ப்பு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.