மும்பையில் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி நடந்த சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. Snapchat என்ற சமூக ஊடகத்தில் 20 வயது இளைஞனுக்கு பள்ளி படிக்கும் மாணவி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் இதன் மூலம் சாட்டிங் செய்து பழகி வந்தனர். தொடர்ந்து இருவரும் ஒரு நாள் நேரில் சந்திக்க விரும்பியுள்ளனர்.

இந்த நிலையில் சிறுமியை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்ற இளைஞர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் குறித்து சிறுமி பெற்றோரிடம் கூறியதை தொடர்ந்து அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். தற்போது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் சமூக ஊடகங்களில் இது போன்ற நபர்களிடம் பேசும்போது அவர்களை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளனர்.