நீரில் மூழ்கியுள்ள சாலைகளில் வசிக்கும் குடும்பங்களின் வங்கி கணக்கில் தலா 25,000 ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டும் என்று ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வெள்ள தடுப்பு பணிகளை சரிவர மேற்கொள்ளாததால் மக்கள் வரிப்பணத்தை திமுக அரசு வீணடித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள ஓபிஎஸ், மீட்பு நிவாரண மற்றும் மறுவாழ்வு பணிகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.