அமெரிக்க நாட்டில் தெற்கு கரோலினா மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜூல் படேல் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்தியாவில் இயங்கி வரும் கால் சென்டர்கள் மூலம் அமெரிக்காவில் உள்ள முதியவர்களை ஏமாற்றியுள்ளார்.

மேலும் இதன் மூலம் அவர் பல கோடி ரூபாயை சுருட்டியதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான வழக்கில் போலீசார் அவரை கைது செய்து தெற்கு கரோலினா கோர்ட்டில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு அவருக்கு 51 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.