புதுச்சேரி அரசு துறையில் காலியாக உள்ள ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்வர் ரங்கசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள ஐந்தாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும். மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி மாநிலம் நாட்டிலேயே முதலிடத்தில் உள்ளது. மக்கள் மீது எந்த ஒரு வரி சுமையை திணிக்காமல் திட்டங்களை செயல்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது. இதனால் புதுச்சேரி மாநில இளைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.