இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் அரங்கேரி வருகிறது. இது தொடர்பாக மக்களுக்கு அரசு அறிவுறுத்தல்களை வழங்கி வந்தாலும் மோசடிக்காரர்கள் தினந்தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி தற்போது திருமண வரன் இணையதளத்தின் மூலம் அறிமுகமான பெண்ணிடம் பிரிட்டனில் ஐடி பொறியாளராக பணியாற்றும் பெங்களூரை சேர்ந்த நபர் 1.14 கோடி இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோ காலில் அந்த பெண்ணின் உடைகளை களைந்து பேசியதுடன் அதனை பதிவும் செய்து மிரட்டி அந்த நபரிடம் பணத்தை சுருட்டியுள்ளார். பாதிக்கப்பட்டவர் போலீசில் புகார் அளித்த நிலையில் வங்கி கணக்கில் இருந்த 84 லட்சத்தை முடக்கியுள்ளனர். அந்தப் பெண்ணையும் தற்போது போலீசார் தேடி வருகிறார்கள். எனவே ஆன்லைனில் புதிய நபர்களிடம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும் என சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.