கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியை சேர்ந்தவர்கள் நவ்ஷாத் அப்சனா தம்பதி. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நவ்ஷாத் திடீரென காணாமல் போய் உள்ளார். இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிந்து அவரது மனைவி அப்சனாவிடம் விசாரித்த போது கணவரை கொன்று புதைத்து விட்டதாக கூறியுள்ளார்.

இதனால் நவ்ஷாத்தின் உடலை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டிருந்த போது தொடுபுழா அருகே உள்ள கிராமத்தில் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் நவ்ஷாத்திடம் விசாரித்ததில் அப்சனா தொடர்ந்து அவரிடம் சண்டையிட்டு வந்ததால் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அப்சனாவின் உறவினர்கள் தினமும் தன்னை தாக்கி காயப்படுத்தியதால் உயிருக்கு பயந்து வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கூறியுள்ளார். இதையடுத்து காவல் துறையினர் கணவரைப் பற்றி தவறான தகவல் கொடுத்த அப்சனாவை கைது செய்துள்ளனர்.