இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டத்தை குறைப்பதற்காக ஒவ்வொரு மாநிலங்களிலும் அரசாங்க முன்வந்து வேலைவாய்ப்பு முகாம்களை நடத்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது. அதன்படி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற ஜூலை 14ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் 221 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் அனசிஸ் லேப் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் பணியிடத்திற்கு B.Sc, M.Sc கல்வி தகுதி உடையவர்கள் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைப் போலவே வசந்தா கெமிக்கல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் ஆபரேட்டர் பதவியில் காலி பணியிடங்கள் உள்ள நிலையில் இந்தப் பணிக்கு 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். மேலும் ஹைக்ரோ கெமிக்கல் ஃபார்மா டெக்பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள வெல்டர்கள் மற்றும் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி உடையவர்கள் வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைப் போலவே பல நிறுவனங்களில் பல்வேறு காலி பணியிடங்கள் உள்ளது.