தெலங்கானா மாநிலத்தில் சேவல் ஒன்றை காவல்துறையினர் சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் பூரெட்டிப்பள்ளி கிராமத்தில் சிறுவன் ஒருவன் சேவல் ஒன்றை திருடிச் சென்றுள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிறுவனை மடக்கி பிடித்து அறிவுரை வழங்கி பெற்றோரிடமே ஒப்படைத்தனர்.

இதனையடுத்து ,அந்த சேவலை உரிமையாளர் யார் என கண்டறிந்து ஒப்படைக்கும் வரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக உணவு மற்றும் தண்ணீர் வழங்கி சிறையில் அடைத்துள்ளனர். அதன்படி, கடந்த 2021ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி சேவல் சிறையில் அடைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.