தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாளை காலை 10:30 மணிக்கு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் மூலமாக தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு, 12-ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ பட்டப்படிப்பு மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி முடித்த பதிவு தாரர்கள் கலந்து கொள்ளலாம். இதில் தகுதியுள்ள தனியார் துறையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் பயோடேட்டா மற்றும் கல்வி சான்றுகளுடன் இந்த முகாமில் கலந்துகொண்டு பயன் பெற்றுக் கொள்ளலாம்.

இதில் கலந்து கொள்வதன் மூலமாக தனியார் துறை நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படும்போது வேலை வாய்ப்பு அலுவலக பதிவு ரத்தாகாது. மேலும் தனியார் நிறுவனத்தினரும் தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய முகாமில் கலந்து கொள்ளலாம். தொடர்புக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குனர் தெரிவித்துள்ளார்.