திடக்கழிவு கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் அருகே இருக்கும் ஆலம்பாளையம் பேரூராட்சி சார்பாக 15-வது வார்டில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பை சேகரிக்கும் கிடங்கு அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது. மேலும் சுத்தம் செய்வதற்கான பணியை பேரூராட்சி அலுவலர்கள் செய்து வந்தனர்.

இது குறித்து அறிந்த அப்பகுதி மக்கள் திடக்கழிவு கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தார்கள். மேலும் அங்கு நடந்து வந்த பணியை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேரூராட்சி செயல் அலுவலர் கிருஷ்ணவேணி மக்களுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். ஆனால் அவர்கள் சமாதானம் அடையாததால் அங்கு பணி முடக்கப்பட்டது.