உத்தபிரதேச மாநிலம் ஷேக்புரா காதீம் கிராமத்தை சேர்ந்த முஸ்கான் என்ற பெண் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞருக்கு தொடர்ந்து எஸ் எம் எஸ் அனுப்பியுள்ளார். அப்போது முஸ்கானின் சகோதரர் ஆதித்யா எஸ் எம் எஸ் அனுப்ப வேண்டாம் என கண்டித்துள்ளார். இதனை பொருட்படுத்தாத முஸ்கான் தொடர்ந்து எஸ் எம் எஸ் அனுப்பியுள்ளார்.

இதில் கோபமடைந்த ஆதித்யா தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் தனது தங்கை என்றும் பாராமல் சுட்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றார். துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டு முஸ்கானின் தாய் பப்பிதா மற்றும் அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்து அதிர்ச்சடைந்தனர்.

பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த முஸ்கானை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் தங்கையை சுட்டு கொன்று விட்டு தலைமறைவான ஆதித்யாவை தேடி வருகின்றனர்.