மத்திய பிரதேச மாநிலம் காட்னி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவரை ஓடும் ரயிலின் கழிவறையில் வைத்து பன்காஜ் குஷ்வாஹா என்ற நபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். ஜாபல்பூர் – ரீவா மீமு இடையேயான ரயிலில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

அந்த நபரிடம் இருந்து தப்பித்த பெண் சாத்துனா ரயில் நிலைய காவல்துறையினரிடம் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து ரயில் கழிவறையில் கதவை பூட்டிக்கொண்டு பதுங்கி இருந்த பன்காஜ் குஷ்வாஹை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.