மத்தியப் பிரதேசத்தில் உள்ள இந்தூர் கவுதம்புராவில் உள்ள கிராமத்தில் 30 வயது பெண்ணை, ஹோலி பண்டிகையையொட்டி அவரது வீட்டில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து வந்து நான்கு பெண்கள் அடித்து உதைத்துள்ளனர். அத்துடன் அந்தப் பெண் கெஞ்சியும் பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி ஊர்வலமாக நடத்திச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக 4 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.