இலங்கை பொருளாதார நெருக்கடியில் சிக்கி தற்போது மீண்டு வந்து கொண்டிருக்கிறது. முன்னதாக இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்கி முதல் தவணை கொடுக்கப்பட்டது. அதில் இரண்டாவது தவணைக்காக தற்போது இலங்கை காத்திருக்கிறது.

இந்நிலையில் இலங்கையின் நிதி துறையை பலப்படுத்துவதற்காக 1668 கோடி ரூபாய் கடன் உதவி வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி உறுதியளித்துள்ளது. நாட்டின் நிர்வாகத்தை பலப்படுத்தவும் வங்கித் துறையில் ஸ்திரத்தன்மை ஏற்படுத்தவும் பெண்கள் தலைமையில் சிறு குறு நிலையான நிதியை மேம்படுத்துவதற்காகவும் கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.