2019 ஆம் ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா தொற்றிலிருந்து உலக நாடுகள் மீண்டு சகஜ நிலைக்கு திரும்பி உள்ளது. இந்நிலையில் சிங்கப்பூரில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 32,035 பேர் அங்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே சமூக இடைவேளை முக கவசம் அணிதல் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கடைபிடிக்குமாறு நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.