ஈராக் நாட்டின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள சோரானில் செயல்பட்டு வரும் பல்கலைக்கழகத்தின் விடுதியில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. விடுதியின் ஒரு அறையில் பிடித்த தீயானது மற்ற அறைகளுக்கும் வேகமாக பரவியுள்ளது.

மூன்றாவது மற்றும் நான்காவது தளங்களில் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த சமயத்தில் பல மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் வெளியே ஓடி தப்பி இருந்தாலும் சிலர் கட்டிடத்திற்குள்ளேயே சிக்கிக்கொண்டனர்.

இதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு கடுமையான போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்த தீ விபத்தில் 18 பேர் காயமடைந்த நிலையில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். மின்கசிவு தான் தீ விபத்துக்கு காரணம் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.