தமிழகத்தில் நடந்து முடிந்த குரூப்-4 தேர்வின் இறுதி விடை குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூலை 24ஆம் தேதி இந்த தேர்வு நடைபெற்ற நிலையில் அப்போது தேர்வு எழுதியவர்கள் இந்த தேர்வில் குழப்பமும் மோசடியும் நடந்திருப்பதாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். அதனை விசாரித்த நீதிபதி இறுதி விடை குறிப்பை வெளியிட உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இறுதி விடை குறிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.