எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற திட்டத்தின் அரசாணையை அதிகாரிகள் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதிகாரிகள் தமிழிலேயே கையொப்பமிட வேண்டும், அரசாணைகள் இனி தமிழில் வெளியிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனை யாரும் முறையாக பயன்படுத்தவில்லை என புகார் எழுந்த நிலையில் மீண்டும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.