நடிகை பூனம் பாண்டே தான் உயிரிழந்ததாக பொய் செய்தியை தனது உதவியாளர்களை வைத்து பரப்பினார். அதன் பின்னர் தான் உயிரோடு இருப்பதாக வீடியோ வெளியிட்டு, கேன்சர் குறித்த விழிப்புணர்விற்காகவே இவ்வாறு செய்தேன் என கூறினார். இந்த செய்தி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மாடல் பூனம் பாண்டே மற்றும் அவரது மேலாளர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு அனைத்து இந்திய சினிமா தொழிலாளர்கள் சங்கம் மும்பையின் விக்ரோலி காவல் நிலையத்தின் மூத்த காவல் ஆய்வாளருக்கு புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளது.