பாலிவுட் நடிகை பூனம் பாண்டே தான் இறந்ததாக அறிவித்துவிட்டு பின்னர் மறுப்பு தெரிவித்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து பொய் செய்தி பரப்பியதற்காக பூனம் பாண்டே மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகை கஸ்தூரி, பூனம் பாண்டே பப்ளிசிட்டிக்காக எதை வேண்டுமானாலும் செய்வார் என காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், பூனம் பாண்டேவைக் காட்டிலும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் மிகவும் பிரபலமாக உள்ளது. அவர் செய்தது ஒரு மோசமான செயல் என கூறியுள்ளார்