கரூர் மாவட்டத்தில் உள்ள குளத்துப்பட்டி பகுதியில் பழனிசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு இந்திராணி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இருவரும் இரு சக்கர வாகனத்தில் மேட்டுப்பட்டியில் இருந்து மோளப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது மாரிமுத்து என்பவர் ஓட்டி வந்த லாரி எதிர்பாராதவிதமாக இரு சக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவன் மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.