சென்னை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை கல்வி மூலம் வழங்கப்படும் இரண்டு ஆண்டு பிஎட் படிப்புக்கான விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொடைநிலை கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பிஎட் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த படிப்புக்கு நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கையில் 500 இடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதற்கான இணையதள பதிவு தற்போது தொடங்கியுள்ளதாகவும் விருப்பம் உள்ளவர்கள் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு மின்னஞ்சல் அல்லது 8015758308 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.