தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் பள்ளி கல்லூரிகளின் வாகனங்களுக்கான விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதை முறையாக பின்பற்றுவது குறித்தும் கல்வி ஆண்டின் தொடக்கத்திலேயே அதிகாரிகள் மூலமாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதியில் இருந்து மற்ற கிராம பகுதிகளில் செல்லக்கூடிய பள்ளி கல்லூரி வாகனங்களை தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஆய்வு செய்தனர்.

பள்ளி கல்லூரி வாகனங்களில் அரசு விதிமுறைகள் பின்பற்றாமல் இருந்தது கண்டறியப்பட்டது இதனால் முறையான ஆவணங்கள் மற்றும் விதிமுறைகளை கடைபிடிக்காத வாகனங்களுக்கு ரூபாய் 26,000 அபராதம் விதிக்கப்பட்டது.