தயாரிப்பாளர்களின் பணத்தை இயக்குநர் அமீர் பயங்கரமாக திருடுவார் என்று தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார். அமீர் இயக்கத்தில் உருவான ‘பருத்திவீரன்’ ஞானவேல் ராஜாவுக்கு முதல் படம். அதில், பல வகைகளில் போலி கணக்கை காண்பித்து அமீர் மோசடி செய்ததாக ஞானவேல்ராஜா தெரிவித்திருக்கிறார். ஞானவேல் ராஜா அளித்துள்ள சமீபத்தில பேட்டியில், மற்ற தயாரிப்பாளர்களிடமும் அமீர் இதேபோல நடந்துகொண்டதாகவும், அதற்கான ஆதாரம் என்னிடம் இருப்பதாக ஞானவேல்ராஜா தெரிவித்தார்.