நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் மீது IPC பிரிவு 509பி, பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்யுமாறு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், மகளிர் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ள நடிகை ராதிகா சரத்குமார், இதுபோன்ற விஷயங்களைப் பொறுத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இதிலிருந்து பாடம் கற்க வேண்டும் எனவும் கூறியுள்ளார். ராதிகா தவிர, நடிகை மாளவிகா மோகனன், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மன்சூர் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.