பிக் பாஸ் நிகழ்ச்சியில் இந்த வருடம் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில் ஆரம்பத்தில் 18 போட்டியாளர்களுடன் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் வாரம் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்யப்பட்டார். அதன் பிறகு ஐந்து புதிய போட்டியாளர்களை வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக் பாஸ் களமிறக்கினார்.

அதன் பிறகு ஆட்டம் சூடு பிடித்து சண்டைகளும், பிக் பாஸ் வீட்டில் அதிகரித்த நிலையில் இன்று மேலும் 3 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் என்டியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய வினுஷா, விஜய் வர்மா மற்றும் அனன்யா எஸ் ராவ் ஆகியோர் மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.