சேலம் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்த ஏ பி ராஜு சமீபத்தில் த்ரிஷா குறித்து அவதூறாக பேசி கண்டனத்தை பெற்றார். தொடர்ந்து த்ரிஷாவும் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் இயக்குனர் மிஸ்கின் பட விழா ஒன்றில் பேசிய பொழுது,  நடிகைகளை இப்படி பேசுவது முற்றிலும் தவறு. அவர்கள் இந்த நடிப்பை தங்கள் கடவுளாக நினைத்துதான் வந்திருக்கிறார்கள். உங்கள் வீட்டு பெண்ணாக இருந்தால் இப்படி பேசுவீர்களா? ஒரு செய்தி போட வேண்டும் என்பதற்காக நடிகையை அதுவும் அவர் ஒரு தாய் அல்லது பெண்.

ஒரு பெண்ணை பற்றி இப்படி பேசாதீர்கள். பத்திரிகைகளும் இப்படி எழுத வேண்டாம். இந்த செய்தி என்னை மிகவும் வருத்தத்தை அளித்தது மற்றும் உங்கள் மகளாக நினைக்கலாம். தங்கையாக நினைக்க வேண்டும். ஏன் காதலியாக கூட நினைக்கலாம் அதில் தவறு கிடையாது. ஆனால் அந்த காதலிலும் ஒரு கண்ணியம் இருக்க வேண்டும். அதனால் ஒரு பெண்ணை பற்றி தவறாக பேச வேண்டாம். த்ரிஷா நல்ல முறையில் பழகக்கூடிய பெண். மிகவும் எளிமையான பெண். அதனால் இனிமேல் இப்படிப்பட்ட செய்திகளை தவிர்க்க வேண்டும் என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.