நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் மூத்த முன்னணி நடிகர். இவர் நடிப்பில் தற்போது வேட்டையன் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ரஜினிகாந்த். இந்நிலையில் ரஜினி குறித்து பல சுவாரஸ்யமான தகவல்கள் இது வரை வெளிவந்துள்ளது. அதன்படி தற்போது ரஜினிகாந்த் படம் பார்க்க மாறுவேடத்தில் சென்ற சம்பவம் குறித்து பார்க்கலாம். ஒரு முறை தன்னுடைய திரைப்படத்தை பார்ப்பதற்கு மாறுவேடத்தில் சென்றுள்ளார். கேப், கண்ணாடி அணிந்து கொண்டு ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு திரையரங்குக்கு சென்று படம் பார்த்துள்ளார்.

முழு படத்தை பார்த்த பிறகு வெளியே வந்த ரஜினியை பார்த்து அந்த சமயத்தில் ரசிகர் ஒருவர் தலைவா என்று அழைத்துள்ளார். இதை காதில் வாங்கிய ரஜினி மாட்டிக்கிட்டோமோ என்று மிரண்டு போய் பதட்டத்தோடு திரும்பி பார்த்து உள்ளார். ஆனால் ரசிகர் தன் நண்பன் ஒருவரை தான் தலைவா என்று அழைத்துள்ளார். அதன் பிறகு ரஜினி ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு சென்று விட்டாராம். இந்த தகவலை ரஜினிகாந்த் பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.