மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் அதிமுகவுடனான கூட்டணியை முதலில் உறுதிசெய்த கட்சி புரட்சி பாரதம். பாமகவுடன் பேச்சுவார்த்தையில் இபிஎஸ் ஈடுபட்டபோதே, அவரை அழைத்து வட மாவட்டத்தில் மிகப்பெரிய பொதுக்கூட்டம் ஒன்றையும் பு.பா.க தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி நடத்தினார். ஆனால், கூட்டணி குறித்து பேச மரியாதைக்காகக் கூட அவரை அதிமுக தரப்பு அழைக்கவில்லையாம். இதனால், ஜெகன் தீராத மனவருத்தத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.