தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளுள் ஒருவர் த்ரிஷா. இவர் திரையில் காலடி எடுத்து  வைத்து 20 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனாலும் அதே அழகோடு தான் இன்றும் பல லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் நடிப்பில் சமீபத்தில் லியோ படம் வெளியானது. கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு விஜய்யோடு இணைந்து நடித்துள்ளார். இப்படி பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை. இந்த நிலையில் திருமணம் குறித்து சில வருடங்களுக்கு முன்பாக கொடுத்த பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

அதில், என்னுடைய கவனம் முழுவதும் தற்போது சினிமாவில் மட்டுமே இருக்கிறது. என்னுடைய திருமணம் குறித்து பல செய்திகள் வெளியாகிறது. ஆனால் திருமணம் குறித்து நான் சொல்லிக் கொள்வது என்னவென்றால் திருமணம் செய்யும் நபர் நம்முடைய மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும். திருமணத்திற்கு பிறகு விவகாரத்தை செய்வது எனக்கு பிடிக்காது. அப்படி கஷ்டப்பட நான் விரும்பவில்லை. அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அவர் ஒரு ஜென்டில்மேன் நல்ல கணவராகவும், அப்பாவாகவும் இருக்கிறார். அவரைப் போன்ற ஒரு கணவராக ஒருவர் வரவேண்டும் என்று எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள் என்று கூறியுள்ளார். இது திரிஷாவின் பழைய பேட்டி என்றாலும் கூட தற்போது இது வைரலாகி வருகிறது.