நடிகர் சங்கம் அளித்த கண்டன அறிக்கையை 4 மணி நேரத்தில் வாபஸ் பெற வேண்டும் என நடிகர் மன்சூர் அலிகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். லியோவில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், த்ரிஷாவை தொந்தரவு செய்யும் காட்சிகள் அமைக்கப்படவில்லை என சர்ச்சையான கருத்தைக் கூறியிருந்தார். இதற்கு பலரும் கடும் கண்டனம் தெரிவித்துவருகின்றனர்.

இதனிடையே த்ரிஷா குறித்த சர்ச்சை பேச்சுக்கு விளக்கம் கொடுத்த அவர், “நடிகர் சங்கம் தவறு செய்துவிட்டது. நடிகர் சங்கம் என்னிடம் விளக்கம் கேட்கவே இல்லை. நான் மன்னிப்பு கேட்கக்கூடியவனா? எரிமலை குமுறினால் எல்லாரும் ஓடிவிடுவார்கள். தமிழ்நாடே என் பக்கம் நிற்கிறது” என கோபமாக பேசியுள்ளார்.