நான் மன்னிப்பு கேட்கும் சாதியா? என நடிகர் மன்சூர் அலிகான் மீண்டும் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார். நடிகை த்ரிஷா பற்றி சமீபத்தில் மன்சூர் பேசிய கருத்து கடும் எதிர்ப்புகளுக்கு வழிவகுத்தது. இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மன்சூர், ‘சர்ச்சை பேச்சு வீடியோ குறித்து என்னிடம் யாரும் விளக்கம் கேட்கவில்லை.

நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது. கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும். என்னை கருப்பு ஆடாக காட்டிவிட்டு நடிகர் சங்கம் நல்ல பேர் எடுத்து கொள்கிறார்கள். இது தொடர்பாக நான் நிச்சயம் வழக்கு தொடர்வேன்’ என்றார்.