அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினருக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை வழங்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் வாய்ப்பு இருந்தால் காலத்தின் கட்டாயம் என்றால் டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன் என ஓபிஎஸ் கூறியுள்ளார். இது பற்றி மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை விட மக்கள் தீர்ப்பையே நம்புகிறோம். சசிகலாவை விரைவில் சந்திப்பேன் என்றும் கூறினார். இதனால் இபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ்,டிடிவி தினகரன் மற்றும் சசிகலா என மூன்று தரப்பும் விரைவில் இணையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.