அதிமுகவில் இரட்டை தலைமை விவகாரம் நீண்ட நாட்களாக நீடித்து வந்த நிலையில் சமீபத்தில் ஓபிஎஸ் முழுவதுமாக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் ஒட்டு மொத்தமாக ஓரங்கட்டப்பட்ட நிலையில் இ பி எஸ் ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி இரண்டு நாட்களில் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அதிமுகவினருக்கு புதுப்பிக்கப்பட்ட உறுப்பினர் அட்டை வழங்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. அனைத்து உறுப்பினருக்கும் உறுப்பினர் அட்டை கிடைத்தவுடன் பொதுச்செயலாளர் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டுவதற்கான வேலைகளை முடுக்கி விட்டு உள்ளதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறியுள்ளார். கோவில்பட்டியில் நேற்று இபிஎஸ் படத்துடன் கூடிய உறுப்பினர் அட்டைகளை தொண்டர்களுக்கு அவர் வழங்கினார். அதன் பிறகு பேசிய அவர், எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பின் எடப்பாடியை தான் பார்க்கிறோம் என்று கூறினார். இதன் மூலம் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடக்கும் என்பது உறுதியாகி உள்ளது.