சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக பல்வேறு சிறப்பு சலுகைகளை வழங்கி வருகிறது. அதன்படி மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு டிஜிட்டல் பயணச்சீட்டு முறையை ஊக்குவிப்பதற்காக சிறப்பு கட்டண சலுகையை அறிவித்துள்ளது.

அதாவது மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் டிசம்பர் 3ஆம் தேதி இன்று QR குறியீடு மூலம் ஐந்து ரூபாய் செலுத்தி பயண சீட்டுகள் பெற்று ஒரு வழி பாதை பயணத்தை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பிரத்தியேக கட்டணம் டிசம்பர் மூன்றாம் தேதி மட்டுமே செல்லுபடியாகும். அதுமட்டுமல்லாமல் க்யூ ஆர் குறியீடு மூலம் பெறப்படும் பயண சீட்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.